இந்த ஏரியா பக்கமே உன்னை பாக்க கூடாது.. சன்னி லியோனுக்கு கொலை மிரட்டல்!!

410

சன்னி லியோன்..

அமெரிக்க ஆபாச திரைப்பட நடிகையான சன்னி லியோன் Blue Flimகளில் நடித்து அதை வியாபாரமாகவே செய்து வந்தார். அதே துறையில் தன்னுடன் நடித்த ஆபாச நடிகர் டேனியல் வெப்பர் எனபவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

ஆனால், தான் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து சக போட்டியாளர்களுடன் பழகி வந்த சன்னிலியோன் அந்த தொழிலை செய்தவர் என்பது பின்னாளில் கண்டுபிடித்து அவர் பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது சன்னியோன், இதே சமூகத்தில் நான் சிறந்த பெண்மணியாக வளர்ந்துகாட்டுவேன் என சவால் விட்டு சென்றார்.

அவர் சொன்னதை போலவே நிறைய அனாதை குழந்தைகளை தன் சொந்த செலவில் காப்பாற்றினார். மேலும் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு இவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன் முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தியில் சில படங்களில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சன்னி லியோன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அந்த சமயத்தில் நடந்த பிரச்னைகளை குறித்து தற்போது பேசியுள்ளார்.

அதில் சன்னி லியோன், தான் இந்தியாவிற்கு வரவிரும்பவில்லை என்றும், தன்னை எல்லாரும் வெறுப்பார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் தன் கணவர் தன்னை அழைத்து சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னதாகவும்,

அதன் பிறகு தனக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தததாகவும், அப்போது சிலர் தன்னை படத்தில் நடிக்க கூடாது என்று கொலை மிரட்டல் எல்லாம் விடுத்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.