நீ ஒரு கோழை : பிக்பாஸ் வீட்டில் அடுத்து வெடிக்கப் போகும் பெரிய சண்டை!!

927

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் வெளியேறிய பின்பு வீடு ஒரு அமைதியாக இருக்கும், இனி சண்டை போட யார் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி இது எல்லாம் தெரிந்து எப்படி பிக்பாஸ் வனிதாவை வெளியேற்றினார் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் வனிதா வெளியேறிய அன்றைய நாளே மீரா நான் பச்சையா கேட்பேன், வனிதாவை எல்லாம் தாண்டி என்று கூறினார். இதனால் அடுத்த வனிதா, மீரா தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மோகன் வைத்யா மற்றும் சரவணன் இருவரும் இன்று சண்டை போட்டுகொண்டனர்.

ஏனெனில் காலையில் அனைவரும் காபிக்காக காத்திருக்கும் வேலையில் மோகன் வைத்யா மற்றும் ஒரு கப் எடுத்து தனக்கு மட்டும் காபி போட்டுக்கொண்டார். அதை பார்த்து கோபமான சரவணன் அதை ஒரு விதமான செய்கையால் செய்து காட்டினார்.

அதை எப்போதும் போல் சரவணன் விளையாட்டாகவே செய்து காட்ட, உடனே மோகன் வைத்தியா தவறாக புரிந்து கொண்டு, சக போட்டியாளர்களிடம் கதறி அழுதார்.

இதையடுத்து இந்த பிரச்சனைக்கு சரவணன் மன்னிப்பு கேட்க, ஒரு வழியாக இது முடிந்தது. அதன் பிறகு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது நீங்கள் யார் கோழை என்று கூறுவீர்கள் என்று கேட்டார்.

அதற்கு மோகன் வைத்யா ஒரு கோழை என கூறி சரவணன் அவரை வெறுப்பேற்றியுள்ளார். வரும் நாட்களில் இந்த சண்டை இன்னும் பெரிதாகும் என எதிர்பார்க்கலாம்.