“பாலு சீக்கிரமா எழுந்து வா” உருக்கத்துடன் இளையராஜா வெளியிட்ட வீடியோ..!

444

இளையராஜா……

கொரோனா தொற்று பா திப்பால் சி கிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ம ருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முன்னணி பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தனக்கு லேசான கொரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் எஸ்.பி.பி பேசியிருந்தார்.

எஸ்.பி.பி உடல்நிலையில் எந்தவித பி ரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக நேற்று கடந்த ஆகஸ் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட ம ருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே, இன்று நேற்று ம ருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை க வலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்த இசை ஞானி இளையதாரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலு சீக்கிரமா எழுந்து வா” என ஒலிக்கும் அவரது குரல் கேட்போரை கண்கலங்க செய்கிறது. மேலும், சினிமாவை தாண்டியது நமது நட்பு எனவும், சண்டைகள் போட்டாலும் நாம் நண்பர்கள் எனவும் இளையராஜா மனம் உருக பேசியுள்ளார்.