திருமணத்திற்கு பிறகும் வேறு ஒரு ஹீரோவுடன் அந்த காட்சியில் நடித்த ரீமாசென் ! கடுப்பான கணவர் !

387

நடிகை ரீமாசென்…

நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. வழக்கம் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

இவர் நடிப்பில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் மோசமாக நடித்திருந்தார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து தலையிலடித்துக் கொண்டாராம்.

திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண்.

அவர் இதுகுறித்துக் கூறும்போது, “கேங்க்ஸ் ஆப் வசேபூர்” படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை.

அவர் மனம் புண்பட்டுள்ளார். நான் படத்திற்கு தேவை என்பதால் தான் அந்த படத்தில் சில படுக்கயறை காட்சிகளில் நடித்தேன். ஆனால, படம் முழுக்க அந்த காட்சிகள் இருப்பது போல விளம்பரம் செய்து விட்டார். இதனை வீட்டில் புரிய வைத்துள்ளேன்.தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.