தொழிலதிபருக்கு வந்த ஆசை : நயந்தாராவுக்காக பேசப்பட்ட 10 கோடி!!

1086

நயந்தாரா

தென்னிந்தியா சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதில் தான் நயன்தாரா தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் அவர்,

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, விஜய், ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும், என்று விரும்பியுள்ளார்.

இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அந்த தொழிலதிபருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் கூட படத்தில் நடிக்க முடியாது, என்று கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரூ.10 கோடி மேட்டர் குறித்து கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா, என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும், அந்த துணிக்கடை தொழிலதிபர் ஹீரோவாவதும், அவருக்காக ஹீரோயின் தேடுதல் வேட்டை நடப்பதும் உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது.