“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”..! போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

330

கரண் ஜோஹர்…

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 28, 2019 அன்று அவரது இல்லத்தில் அவர் நடத்திய விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

“சில செய்தி சேனல்கள், அச்சு/மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள், நான் ஜூலை 28, 2019 அன்று எனது இல்லத்தில் நடத்திய ஒரு விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக தவறாக தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுக்கள்பொய்யானவை என்ற எனது நிலையை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தேன்.” என்று கரண் ஜோஹர் அந்த அறிக்கையில் கூறினார்.

தான் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொண்டதில்லை அல்லது அத்தகைய எந்தவொரு பொருளையும் உட்கொள்வதை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விருந்தில் எந்தவொரு போதைப் பொருளும் உட்கொள்ளப்படவில்லை.

நான் போதைப்பொருளை உட்கொள்வதில்லை என்றும் நான் அதை ஊக்குவிக்கவில்லை என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூற விரும்புகிறேன். அத்தகைய எந்தவொரு பொருளையும் நுகர ஊக்குவிக்கவில்லை.” என்று அவர் கூறினார்.

தனக்கு எதிரான வெளியாகும் அறிக்கைகள் தேவையில்லாமல் தனது குடும்பத்தினரையும், சகாக்களையும் வெறுப்பு, அவமதிப்பு மற்றும் ஏளனத்திற்கு உட்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.

தர்மா படத் தயாரிப்பு நிர்வாகி க்ஷிதிஜ் பிரசாத் மற்றும் அனுபவ் சோப்ரா ஆகியோர் தனது உதவியாளர்கள், நெருங்கிய உதவியாளர்கள் என்ற அறிக்கைகள் உண்மை இல்லை என்று கரண் தனது அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தினார்.

இந்தி திரையுலகில் போதைப்பொருள் தொடர்பு தொடர்பாக பிரசாத் மற்றும் சோப்ரா ஆகியோரை நேற்று என்சிபி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.