BiggBoss – 4 LIVE: “என்னோட Things-லாம் தொடாக்கூடாது சனம் !” – முதல் நாளே சண்டை !

311

பிக் பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 இன்று வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் வந்த ஐந்து நிமிடத்திலேயே சனம் ஷெட்டி உடன் ஓரண்டை இழுக்கிறார் நம்ம ரேகா.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பல சண்டைகளை பார்த்து உள்ளது. ஆனால் எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம ரேகா.

வீட்டிற்குள், ரியோ முதலில் உள்ளே செல்ல, பின்னால் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் உள்ளே வந்தார். மூன்றாவதாக புன்னகை மன்னன் ஹீரோயின் ரேகா வந்தார்.

அவர் வந்தவுடன் ரேகாவை பார்த்து punnagaiththa சனத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உடனே அறைக்குள் சென்ற ரேகா ஒரு Bed-ஐஆக்கிரமித்து “இது என்னுடைய இடம், நீங்க என் things எல்லாம் தொடக்கூடாது சனம்” என்று பளிச்சென்று முகத்திற்கு நேராக கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 16 போட்டியாள்ர்கள் கலந்து கொள்வது சற்று நேரத்தில் உறுதியாக உள்ளது.