பிக்பாஸ் வீடு முழுக்க வெள்ளம் – ஆளை விடுங்க சாமி என ஓடிய போட்டியாளர்கள் – தொடருமா பிக்பாஸ் ?

308

பிக்பாஸ்…….

இந்த வருஷம் 2020 ஆரம்பிச்ச நாள் முதல் பி ரச்சனை – விறுவிறு சுறு சுறு என ஆரம்பித்த இந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை Lock Down தான். இந்தநிலையில், கொஞ்சம் Entertainment ஆக போய் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 – இல் தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து இந்த நிகழ்ச்சியை பேசும் பொருளாக்கி விட்டார். தற்போது, எல்லோருக்கும் Task கொடுத்த Big Bossக்கே Task கொடுத்துவிட்டது இயற்க்கை.

நிவர் புயலால் இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் Housemates சிலர், “ஆளை விடுங்க சாமி” என்று எஸ்கேப் ஆக பார்க்கிறார்களாம்

உடனே சேனல் புத்திசாலித்தனமாக பிரபல தனியார் ஹோட்டலில் எல்லா போட்டியாளர்களைத் தங்க வைத்துள்ளார்கள்.

வீட்டில் புகுந்த தண்ணியை அகற்றும் வேலைகள் முடிந்துவிட்டால், வழக்கம் போல் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இதனால் Episode பாதிக்காத விதத்தில், நேற்று நடந்த சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.