நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!

554

சீரியல்கள்…

சீரியல்கள் மூலம் டி.ஆர்.பியில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சியில் ஒன்று சன் டிவி. ஆம், தற்போது வரை டி.ஆர்.பியில் எந்த ஒரு சரிவையும் காணாமல் இருந்து வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா, பாண்டவர் இல்லம், ரோஜா, சித்தி 2 போன்ற சீரியல்கள் டி.ஆர்.பியில் முன்னணியில் விளங்கி வருகிறது.

இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சுமார் 700 எபிசோட்கள் வரை பார்க்கப்பட, ரோஜா சீரியல் தீடீரென்று நிறுத்தப்படுகிறது என்று தகவல் வெளியானது.

இந்த செய்தி ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எப்படி நிறுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ரோஜா சீரியல் கண்டிப்பாக நிறுத்திவைக்கப்படாது என்று சன் டிவி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாம். அதுமட்டுமின்றி ரோஜா சீரியல் கண்டிப்பாக 1500 எபிசோட் வெற்றிகரமாக ஓடும் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ரோஜா சீரியல் தற்போது முடிவிற்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.