பிக்பாஸில் தேம்பி தேம்பி அழுத ஷிவானி- பாலாஜி என்ன செய்தார் தெரியுமா?

548

ஷிவானி- பாலாஜி….

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்கள் என்று ரசிகர்களால் கூறப்படுவது பாலாஜி-ஷிவானி தான். ஆனால் இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வருகின்றனர்.

அண்மையில் நிகழ்ச்சிக்கு பார்வையாளர் ஒருவர் கால் செய்து ஷிவானியிடம் உங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்பதால் நாமினேஷனுக்கு வந்தீர்களா என கேட்க அதற்கு அவர் ஆமாம் என்றார்.

அதன்பிறகு ஷிவானி கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பாலாஜி ஏன் அழுகிறாய், தோக்குறதும் ஜெயிக்குறதும் இங்கதான். நமக்கு லைஃப் வெளிலதான் இருக்கு என்றார். மேலும் ஷிவானி இதுதான் கேம் என ஆறுதல் கூறி அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.