வனிதா…
வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு சில வாரங்களுக்கு முன் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா தான் பீட்டர் பாலை பிரிந்ததை ஒற்றுகொண்டார்.
பிறகு, அவர் மீண்டும் பீட்டர் பாலோடு சென்ற போவதாக செய்திகள் பரவ, அதிர்ந்து போன வனிதா, “என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.
தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள். இனி நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” என்று ஒரு சமயத்தில் கூறினார்.
இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மீண்டும் காதலில் விழுந்தேன், இப்போது சந்தோஷமா?” என்று நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார்.
இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.