புது மாப்பிள்ளையுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்!

348

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார். ஆம், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஹீரோ கூட இணைந்து பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

அண்மையில், இவரது நடிப்பில் பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், பெண்குயின் போதுமான வரவேற்பு பெறவில்லை. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது குட் லக் சகி, மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், ராங் தே, சாணி காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், அவருக்கு தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்தினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு, புது மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணுடன் இணைந்து டாப் ஆங்கிள் செல்ஃபி எடுத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, வடிவேலுவின் ஹலோ துபாயா என்ற டயலாக் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.