ஆலியா பட்டுடன் திருமணம்: வெளிப்படையாக கூறிய ரன்பீர் கபூர் !

328

ரன்பீர் கபூர்…

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்.

இரு வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைபையும், ஆலியா பட் சித்தார்த்த் மல்கோத்ராவையும் காதலித்தனர்.

இந்த காதல் கடந்து போக பின்னர் வாரிசுகள் இருவரும் காதலித்தனர். பிரமாஸ்திரா படத்தில் இணைந்து நடித்தபோது தான் இருவரும் காதலில் விழுந்தார்கள்.

இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்தே வந்து சென்றார்கள், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீடு அருகிலேயே ஆலியாபட்டும் சொந்தமாக வீடு வாங்கி குடிசென்றார். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்த நிலையில் தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் உடனான தனது காதலையும், கல்யாணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

டி,வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது விரைவில் காதலி ஆலியா பட்டை திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.