எங்களின் அன்பு காட்டப்படவில்லை… நல்லா எடிட் பண்ணீருக்காங்க – அர்ச்சனா சூசகம்!

311

அர்ச்சனா…

பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா, தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. தற்போது 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா,

தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர்.

இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். ரசிகர்களும் அதே மனநிலையில் இருந்ததால் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் அர்ச்சனா கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “அர்ச்சனா சமையல், டாஸ்க் மற்றும் என்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார்.

ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஆரிக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ்” என பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், மோசமான எடிட்டிங் என்று சொல்லப்போகிறீர்களா என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, தவறான எடிட்டிங்னு நானா சொன்னேன், நீங்க தான் சொல்றீங்க. அது நல்ல எடிட்டிங் தான், ஆரிக்காக மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். நல்ல எடிட்டிங் என்று சூசகமாக ஆரியை கிண்டல் செய்துள்ளார் அர்ச்சனா.