வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.!

307

பாரதிராஜா…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் படத்திலிருந்து விலகி உள்ளாராம். பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம்.

அங்கு கடும் குளிர் நிலவுவதாலும், அது அவரது உடலுக்கு ஒத்துழைக்காது என்பதாலும் பாரதிராஜா அப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.

இதனால் பாரதிராஜாவுக்கு பதிலாக கிஷோர் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

நடிகர் கிஷோர் ஏற்கனவே வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.