அது வெறும் கற்பனைக் கதை : டிஜிபிக்கு எதிராகக் கொதிக்கும் ஸ்ரீதேவியின் கணவர்!!

1054

ஸ்ரீதேவி

‘ஸ்ரீதேவின் ம ரணம் கொ லை’ எனப் பேசிய கேரள டிஜிபின் கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த வருடம் தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உ யிரிழந்தார். ஸ்ரீதேவி இ றந்த பிறகு அவர் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் ச ந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் மற்றும் அவர் தங்கியிருந்த அறைகளில் துபாய் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ‘ ஸ்ரீதேவியின் ர த்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் அவரின் இ றப்பு விபத்து’ என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து ஸ்ரீதேவி இ றப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவி இ றந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?
இந்நிலையில் சமீபத்தில் கேரளகவ்முதி என்ற நாளிதழுக்குப் பேட்டியளித்த கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங், “ தடயவியல் நிபுணரான உமாதாதன் (Umadathan) என் நெருங்கிய நண்பர். அவர் சில காலங்களுக்கு முன்னர், ஸ்ரீதேவியின் ம ரணம் விபத்து இல்லை அது கொ லை என என்னிடம் கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் சில காரணங்களையும் என்னிடம் விளக்கினார். அவர் கூறியபடி, ‘ ஒருவர் எவ்வளவு மது அருந்தியிருந்தாலும் ஒரு அடி நீரில் மூழ்க வாய்ப்பில்லை. அதே நேரம் இ றந்தவரின் காலை வேறு ஒருவர் பிடித்து நீரில் மூழ்கடித்தால் மட்டுமே உ யிரிழக்க முடியும் என என் நண்பன் கூறினார்” என்று டிஜிபி பேசியிருந்தார். டிஜிபி கூறிய தடயவியல் நிபுணர் உமாதாதன் தற்போது உயிருடன் இல்லை.

ஸ்ரீதேவி இ றந்து ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு போ லீஸ் அதிகாரியே இப்படியொரு கருத்தைத் தெரிவித்தது பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. தற்போது டிஜிபியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். ஸ்பாட் பாய் இ (SpotboyE) என்ற பாலிவுட் ஊடகத்துக்குப் பேட்டியளித்து அவர், “இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” எனக் கூறியுள்ளார்.