ஆரி சும்மா சொன்னது நிஜமான நடந்துடுச்சு – சோம் நாய்க்குட்டிக்கு நடந்த சோகம் !

340

சோம்சேகர்…

பிக்பாஸ் வீட்டில் புதிதாக அறிமுகம் ஆனவர் சோம் என்கிற சோம்சேகர். இவர் சூரரை போற்று படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்கள் கடந்து வெற்றிகரமாக விளையாடி கொண்டிருக்கிறார். இவர் தனது வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறார். அதன் பெயர் குட்டு. 2017 ஆம் ஆண்டிலிருந்து குட்டுவை வளர்த்து வருகிறார்.

பிக்பாஸில் வரும் ஒரு டாஸ்கில், சோம் எந்திரனாக நடித்திருந்தார். அப்போது ஆரி, உன் செல்ல குட்டுவை வீட்டில் விட்டு வந்திருக்கிறாய், நீ திரும்ப வீட்டுக்கு போவதற்குள் அதற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வாய் என கேட்டார்.

டாஸ்கில் எந்திரனாக இருக்கும் சோமை கோபப்படுத்தவும், வருத்தப்பட வைக்கவே அப்படி கேட்டார். இதை அர்ச்சனாவிடம் சொல்லி சோம் வருத்தமடைந்தார். ஆனால் தற்போது சோமின் செல்ல நாயான குட்டு உண்மையாகவே இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விசயம் சோமிற்கு தெரிந்தால் மிகவும் வருத்தமடைவார். ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ் அனைவராலும் கார்னர் செய்யப்படும் ஆரியை, இந்த விசயம் தெரியவந்தால், இன்னும் ஓரங்கட்டப்படுவார் என தெரிகிறது.