முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்!

552

செந்தில்…

கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில்.

இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.

இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் செந்தில் ஆ.யுள் த.ண்.ட.னை கை.தி.யாக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.