செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

595

கீதாஞ்சலி….

தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் பேச வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2012ஆம் ஆண்டு லீலாவதி என்ற பெண் குழந்தையும் 2013 ஆம் தேதி ஓம்கார் ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் வெளிவந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செல்வராகவன் குடும்பத்திற்கு வந்த புதிய விருந்தாளிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைக்கு செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியினர் ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.