மீண்டும் உருவாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம்..! முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு..!

301

திரைப்படங்கள்…

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை.

இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்,

மேலும் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் பிரபல தயாரிப்பாளரான C.V.குமார், சூது கவ்வும் 2 மற்றும் இன்று நேற்று நாளை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் கதையை படித்துள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.