21 வயதில் திருமண கோலத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்.. காரணம் என்ன?

369

யாஷிகா ஆனந்த்…

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர், இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் பிக்பாஸ் சீசன் 2-விலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் யாஷிகா ஆனந்த், தற்போது முக்கிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார்.

ஆம், எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள கடமையை செய் என்ற படத்தில் தான் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மேலும் தற்போது நடைபெற்றுள்ள அப்படத்தின் பூஜையில் திருமண கோலத்தில் கலந்து கொண்டுள்ளார். அது அப்படத்தில் வரும் காட்சிக்காக என்றும் தெரிய வந்துள்ளது.