எவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணிப் பாடகர்!!

964

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியுள்ளார்.

“இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்”.
மேலும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை.

யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.