மீண்டும் கிளம்பும் 2.0 சப்டைட்டில் விவகாரம்!!

865

எந்திரன்

ரஜினியின் 2.0 படத்தின் சப்டைட்டில் பணியை மேற்கொண்ட தனக்கு சம்பளம் வரவில்லை என்று கூறிய ரேக்ஸின் குற்றச்சாட்டிற்கு லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.0. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவான இப்படம் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வெளியானது.

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0. அந்த நேரத்தில் இந்திய சினிமாவிலேயே மிகப்பிரமாண்ட படைப்பாக உருவான படம் தான் எந்திரன்.

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல பெரிய படங்களுக்கு சப்டைடில் பணிகள் செய்து வரும் அவர் லைகா நிறுவனம் இதுவரை 2.0 படத்திற்கான சம்பளத்தை தரவில்லை என்று கூறினார்.

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எந்திரன் படத்திற்கு எனக்கு சம்பளம் வரவில்லை என சன் பிகசர்ஸ்க்கு மெயில் அனுப்பினேன். ஏதோ நான் சொல்வது பொய் போல, நீங்கள் சொல்வது உண்மையா என விசாரித்து உங்களை தொடர்பு கொள்கிறோம் என்றனர்.

ஆனால் இது வரை தொடர்பு கொள்ளவில்லை. இதையறிந்த ஷஙகர் நண்பன் படத்திற்கு வேலைக்கு முன்னதாக சம்பளம் தந்தார். ஆனால் லைகா நிறுவனம் 2.0 படத்திற்கு இதுவரைக்கும் சம்பளம் தரவில்லை. எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும் என்று கூறினார்.