காக்க காக்க படத்தை தளபதி விஜய் ரிஜெக்ட் செய்த காரணம் தெரியுமா.? தற்போது வரை முடிவுக்கு வராத கவுதம் மேனன்!

471

கவுதம் மேனன்…….

இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டது எனில் அது கவுதம் மேனன் என்று கூட நாம் சொல்லலாம்.

மின்னலே படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்த இவர்க்கு திருப்பு முனையாக காக்க காக்க படம் அமைந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இவர் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மை தான். ஒருபுறம் பட தயாரிப்பில் இறங்கி சிக்கலில் மாட்டினார், மறுபுறம் இவர் இயக்கிய படங்களும் ரிலீஸ் ஆகாமல் பெரிய போராட்டக்களம் ஆனது.

இந்நிலையில் இவர் சினிமா துறையில் நுழைந்து 20 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு பிரபல வார இதழின் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.

மின்னலே பட ரிலீசுக்கு பின் ஜோதிகா மற்றும் நக்மா இவரிடம் சொந்த பேனரில் படம் தயாரிக்க கதை கேட்டுள்ளனர். அப்பொழுது இவர் காக்க காக்க ஸ்க்ரிப்டை சொல்லியுள்ளார். ஜோவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம், அவரின் உதவியால் தான் இப்படம் டேக் ஆப் ஆனது எனவும் சொல்லியுள்ளார். மேலும் நந்தா படத்தை பாருங்க, சூர்யா இந்த ரோலுக்கு செட் ஆவார் எனவும் பரிந்துரை சொல்லியுள்ளார்.

சூர்யா முடிவாவதற்கு முன்பு இப்படக்கதையை அஜித், விக்ரம் மற்றும் தளபதி விஜய்க்கு சொல்லி அவர்களில் யாருமே நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

விஜய்க்கு படத்தின் முதல் பாதி ரொம்ப பிடித்ததாம் எனினும் இரண்டாம் பாதி காரணமாக தான் அவர் ஓகே சொல்லவில்லையாம். கவுதம் மேனனின் ஸ்டைல் என்னவெனில் 80 – 90 சதவிகித ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு ஷூட்டிங் ஆரம்பித்து விடுவாராம்.

பின்னர் தான் கதையோட்டத்திற்கு ஏற்ற மாதிரி காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் அமைப்பாராம். எனினும் விஜய் முழு கதையும் ரெடி ஆகவில்லை என்பதினால், படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். தற்போது வரை கவுதம் மேனனின் படத்தில் நடிக்காத காரணமும் இதுவே தான்.