சிவகார்த்திகேயனின் செயலால் நெகிழ்ந்து போன முக்கிய விஜபி! யார் அவர் தெரியுமா? மனமுருகி சொன்ன விசயம்!

325

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயனின் சாதனை அனைவராலும் பேசப்படும் விசயம். ஒரு சாதாரண காமெடி கலைஞராக டிவி மேடையில் தோன்றி மக்களை மகிழ வைத்து நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் திறமையை காட்டி இன்று டாப் ஸ்டார் ஹீரோவாக வெகு சீக்கிரம் உயர்ந்துள்ளது நிச்சயம் பாராட்டபட வேண்டியது தானே.

காலம் போன போக்கில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் காலத்தே கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் வேறுபாடு உண்டு என்று சொல்வார்கள்.

அவருக்கு தமிழக அரசு அண்மையில் கலைமாமணி விருதை வழங்கியது. கலைத்துறை சார்ந்த பலருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் அவ்விருதை தன் அம்மாவிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற அந்த நிகழ்வை இளைஞர்களின் மனதை ஈர்த்த அரசு கா.வ.ல் துறை அதிகாரிகளுள் ஒருவரான அர்ஜூன் சரவணன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.