கண்ணீர்விட்டு அழுது சோகமான விஷயத்தை கூறிய குக் வித் கோமாளி Chef தாமு- வருந்திய போட்டியாளர்கள்..!

492

Chef தாமு….

தமிழ்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக கொண்டாடிய குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிந்தேவிட்டது. நேற்றுமுன்தினம் வரை கடைசி நிகழ்ச்சி இருக்கிறது என்று ஆறுதலாக இருந்தது.

ஆனால் இப்போது நிகழ்ச்சி முடிந்தேவிட்டது. இனி அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை, இந்த அளவிற்கு கலகலப்பாக இருக்குமா என்பதும் தெரியாது.

இந்நிகழ்ச்சி முடிவது மக்களுக்கு எவ்வளவு சோகமோ அதேபோல் தான் அதில் பங்குபெற்றவர்களுக்கும் உள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி முடிந்தது குறித்து வருத்தம் அடைந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவிற்கு விருது கொடுக்கப்பட்டது.

தாமு விருதை வாங்கியதும், நான் இதை எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு அங்கீகாரத்தை தான் நான் விரும்பினேன்.

இப்போது தான் அது நடந்திருக்கிறது. குக் வித் கோமாளிக்கு வந்தபிறகுதான் நான் சிரிக்க தொடங்கினேன் என்று கூறி அழுதார்.