இருட்டான இடத்தில் ஆண்ட்ரியாவின் புகைப்பட சூட்!! கிறங்கி கிடக்கும் ரசிகர்கள் !

488

ஆண்ட்ரியா……….

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டுள்ளார். இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன், எடுத்த Photoshoot புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இருட்டான அறையில், கருப்பு நிற மேலாடை அணிந்து காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி, ரசிகர்களை ஸ்தம்பிக்க செய்துள்ளார்.