“யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” – சக நடிகைகளுடன் நடனம் ஆடிய சீரியல் நடிகை !

450

கிருத்திகா..

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது .

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில், வீரம் பட பாடலுக்கு, சக நடிகைகள் பாப்ரி மற்றும் ஆர்த்தியுடன் இவர் ஆடிய நட வீடியோ வெளியாகி Likes – களை வாங்கி கொண்டிருக்கின்றன… இதனை பார்த்த ரசிகர்கள், “யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” என்று சிரிக்கிறார்கள்