ஒரே சமயத்தில் நான்கு பிரம்மாண்ட படங்களில் பிரபாஸ், வேற லெவல் லைன் அப்!

339

பிரபாஸ்..

பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் தான் பிரபாஸ், இவர் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சாஹா திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது, ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் பிரபாஸ் அடுத்தடுத்து நான்கு மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், இவர் நடித்து வந்த ராதே ஷ்யாம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். அதனை தொடர்ந்து அதிபுருஷ், சலார், Project K உள்ளிட்ட படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த நான்கு படங்களும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.