விவாகரத்து சர்ச்சைக்கு பின் சமந்தாவின் கணவர் சத்தமில்லாமல் கோவாவில் செய்த காரியம்!

437

கோவாவில்..

கடந்த சில நாட்களாக சமந்தாவின் கணவர் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து பெறுகின்றார். இருவரும் பிரிய போகின்றார்கள் என்ற வதந்தி வைரலாகியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு காரியத்தினை நடிகர் நாகர்ஜுனா செய்து முடித்துள்ளார்.

சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது.

கோவா தனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும், அங்கு வசிக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா. இந்நிலையில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் அதுவும் கடற்கரைக்கு அருகில் நிலம் வாங்கியிருக்கிறாராம்.

அந்த இடத்தில் பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்ட கணவனும், மனைவியும் முடிவு செய்திருக்கிறார்களாம். சமந்தா சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனி என்கிற பெயரை நீக்கிவிட்டார்.

இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரியப் போகிறார்கள். அதனால் தான் அகினேனியை கழற்றிவிட்டுவிட்டார் என்று பேச்சு கிளம்பியது.

விவாகரத்து பேச்சு கிளம்பியிருக்கும் நேரத்தில் கணவருடன் சேர்ந்து இடம் வாங்கியதன் மூலம் தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இருந்து அகினேனியே நீக்கியது குறித்து சமந்தா விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் நிலம் வாங்கியது தான் அதற்கு விளக்கம் என்பது போன்றாகிவிட்டது.