நயன்தாரா..
தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.
இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.
தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது குழந்தை ஒன்றைத் தூக்கி வைத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போஸ் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், “என்னடா இது, எதோ தப்பா இருக்கே ” என்று சந்தேகப்படுகிறார்கள்.