பிரியங்கா மோகன்..
தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன், கையில் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.