டூ பீஸ் உடையில் தொடையை காட்டி அலற விட்ட நடிகை ஈஸ்வரி ராவ்!!

1831

ஈஸ்வரி ராவ்..

16 வயதில் நடிக்க வந்தவர் ஈஸ்வரி ராவ். ஓவர் கிளாமர் காட்டி நடிக்க விரும்பாததால் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் 44 வயதில் அவர் ரஜினியின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

உண்மையில், இளம் வயதில் கிளாமர் காட்டியும் அவருக்கு சரியான வாய்புகள் அமையவில்லை என்பது தான் நிதர்சனம். ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர்.

ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதன் பிறகு, விஜயின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான “ராமன் அப்துல்லா” என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதை தொடர்ந்து, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “அப்பு”, “குட்டி”, “தவசி” போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘’விரும்புகிறேன்’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை பெற்றார்.

‘’சுள்ளான்’’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘’சரவணா’’ படத்திலும் தோன்றியிருந்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆ யத்தமானார். இவர் தற்போது “காக்கி” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் “காலா” திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.காலா படத்தில் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுள்ளான் படத்தில் ரஜினியின் போஸ்டரை பார்த்து நடித்தது எனக்கு நினைவே இல்லை. ஒரு பேட்டியில் போட்டுக் காட்டியபோது தான் நினைவுக்கு வந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை.

காலா படத்தில் நடிக்க அழைத்தபோது ரஜினியின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்கள் என்றே நினைத்தேன். நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தாரும் அப்படித்தான் நினைத்தார்கள் என்று கூறியுள்ளார் அம்மணி.

இந்நிலையில், இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த போது கவர்ச்சி உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வட்டமடித்து வருகின்றன. அந்த புகைப்படங்கள் இங்கே.