கண்ணீர் விட்ட சாய் பல்லவி.. கட்டிப்பிடித்த நானி!!

621

சாய் பல்லவி..

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியான விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாய் பல்லவி.

அப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. சாய் பல்லவி தெலுங்கில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி அவரை அழைத்தனர். அதனால், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சாய் பல்லவி மேடையில் கண் கலங்க ஆரம்பித்தார். கண்களில் வழியும் கண்ணீரோடு அவர் பேசினார்.

“உங்கள் முன்னால் இப்படி நிற்பதற்கு நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. இந்த அன்புக்கும், பாராட்டுகளுக்கும் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த சினிமா துறையில் என்னை விட பல மடங்கு திறமையானவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால், எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்கிறேன்,” என்று சாய் பல்லவி கண் கலங்க.. இதனை கேட்டு நெகிழ்ந்து போன படத்தின் ஹீரோ நானி, சாய்பல்லவியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.