ஆண்ட்ரியா..
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி எடுத்து கொண்டார்.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும்,
மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை விட்டு பதற விட்டார்.
தற்போது, துபாயில் நடந்த லைவ் ஷோவில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்களையும், அவர் பாடிய வீடியோக்களையும் தனது சமூகவலைதள பக்கத்தில் போட்டு, ரசிகர்களை உறைய வைத்துள்ளார். அவரது குரலை கேட்டு மட்டுமல்ல, அவரது உடையையும் பார்த்து இளசுகள் தள்ளாடி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram