தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி : சோகத்தில் நடிகை!!

856

பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார்.

படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா நடித்திருந்த மான்ஸ்டர் படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, படக்குழுவும் செம ஹேப்பி. பிரியா பவானி ஷங்கர் பெயரில் டுவிட்டரில் அதிகம் போலி அக்-கவுண்ட் இருக்கிறது. அவரும் பல முறை தன்னுடைய நிஜ டுவிட்டர் பக்கம் இதுதான் என்று அறிவித்துவிட்டார்.

ஆனாலும் சில போலி அக்-கவுண்ட் அவரது பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வருகிறார்களாம். அப்படி ஒரு போலி அக்-கவுண்ட்டை பதிவு செய்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.