ரித்திகா சிங்..
பஞ்சாப்பை சேர்ந்தவர் ரித்திகா சிங்.. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனால், சுதா கொங்கரா அவரை இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” என முழு நேர நடிகையாக மாறினார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை என்கிற படத்திலும் ரித்திகா சிங் நடித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் அழகான கண்களை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.