ஒட்டு மொத்த தமிழர்களையும் கவர்ந்த இலங்கைப் பெண் லொஸ்லியா : அதிர வைக்கும் ட்ரெண்டிங்!!

1307

பிக்பாஸ்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தான் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் இந்த வருடம் இளைஞர்களை குறி வைத்தே ஷெரின், அபிராமி, சாக்‌ஷி அதோடு இலங்கையை சார்ந்த லொஸ்லியா என இளம் பெண்களை களம் இறக்கியுள்ளனர்.

இதில் லொஸ்லியா இலங்கையின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இந்த பிக்பாஸில் அவருக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது, அவரின் இலங்கை தமிழ், நடந்துக்கொள்ளும் விதம் என அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பலரும் ஓவியாவிற்கு பிறகு இவர் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர், பிக்பாஸ் ஷோ தொடங்கும் போது இவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.