மோசடி கும்பலிடம் இருந்து நிலம் வாங்கி ஏமாந்து போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..!

336

தமிழ் சினிமாவில்..

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அதே போல் ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக, வில்லியாக, தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் ஆக கலக்கி கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.

இவர்கள் இருவரும் பல தயாரிப்பாளர்களிடம் கோடிகளை Demand செய்து தற்போது 1 கோடி அளவைக் ஏமாந்து போய் விட்டார்கள் என்று சொன்னால் நம்புவீங்களா…?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு ஏமாற்று கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், ஆகியோர் வாங்கி உள்ளனர்.

திடீரென்று, இதை பற்றிய உண்மை தெரியவர, ரம்யா கிருஷ்ணனும், நயன்தாராவும் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.