“பணம் வந்துச்சுனா நீ பெரிய ஆளா..?” எஸ்கேவை வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்..!

648

சிவகார்த்திகேயன்..

காவலருக்கு மகனாக பிறந்து, அடையாத துன்பம் எல்லாம் அடைந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறினார், அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் பின் பாண்டிராஜ் புண்ணியத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். இவர் எந்த ஒரு நடிகருக்கு பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து விடுவார். இந்நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளன்றும் தல அஜித் பிறந்த நாளன்றும் இவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்க்கு கூட வாழ்த்து தெரிவித்த நமது நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லை இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் பல்வேறு விதமாக அவரை திட்டி உள்ளார்கள்.