அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டா பெருமையா நினைப்பேன் : இப்படியும் ஒரு நடிகையா?

1879

பிரியங்கா நாயர்..

இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நாயர். இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு கிட்டத்தட்ட 80 மில்லியன் பார்வையாளர்களை உருவாக்கியுள்ளார்.

பிரியங்கா நாயர் ஏகப்பட்ட குறும்படங்களில் நடித்திருக்கிறாரார் . அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இயக்குனர் மிஸ்கின் இயக்கிய பிசாசு 2 திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார்.

இந்த நிலையில் பிரியங்கா நாயர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்பா இறந்துவிட்ட நிலையில் பிரியங்கா நாயர் தனது அம்மா மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வருகிறார். சகோதரனுக்கு மோசமான நோய் இருப்பதால் இவர்தான் குடும்பத்தை கவனித்து வருகிறாராம்.

பிரியங்கா நாயர் 10 வருடங்களாக தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்யாமல் தொடர்பில் இருந்து வருகின்றாராம். அதுவும் தன் காதலனின் பெற்றோர்கள் மற்றும் தன்னுடைய பெற்றோர்கள் இவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து தான் இவர்களும் குடும்பத்தை நடாத்தி வருகின்றார்களாம்.

இந்த நிலையில் எல்லோ நடிகைகளும் முகம்கொடுக்கும் பிரச்சனையான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பிரியங்கா நாயரையும் கலங்கடித்திருக்கின்றதாம். அதை பற்றி கேட்கையில் “என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சிலர் கேட்பார்கள். ஆனாலும் அதை நான் பெருமையாக நினைப்பேன்.

ஏன் என்றால் நடித்துக் கொடுத்த பின்னர் அந்த மாதிரி கேட்டால் தான் பிரச்சனை. ஆரம்பத்திலேயே கேட்டால் நமக்கு அது பிடிக்காமல் அந்த திரைப்படத்தில் இருந்தே விலகி விடுவோம். அதனால் என்னிடம் கேட்கும்போது நான் வேண்டாம் என சொல்லி விடுவேன் என்று பிரியங்கா நாயர் தெரிவித்துள்ளார்.