பெண்களுக்கு நடிகை வித்யா பாலன் கொடுத்த அட்வைஸ்…!

590

வித்யா பாலன்…

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின்

ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அமேசோனில் இவரது படம் சகுந்தலா தேவி Release ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

42 வயதை தாண்டிய இவர் பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“மேலும், நான் நாற்பது வயதை கடந்த பிறகு தான் என்னை நானே ஹாட்டாக உணர்கிறேன். பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள்.