கீர்த்தி சுரேஷ்……..
இளம் வயதிலேயே தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆம் இவருக்கு மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கு, தமிழ் ஆகிய பல மொழிகளில் நடித்து வந்தார். ஆனால் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு பெரிதும் திரையுலகில் மார்கெட் உருவாகியது.
மேலும் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் மற்றும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஆகிய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றார்.
ஆம் கால் பந்து வீரரின் வாழ்க்கை வரலாறு படமான மெய்டன் படத்தில் அஜெய் தேவகன் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருந்தார்.
மெய்டன் படப்பிடிப்பின் போது சில காட்சிகளில் பிகினி உடையில் நடிக்க வேண்டும் என்று படத்தில் தயாரிப்பாளர் கண்டிசன் போட்டாராம்.
ஆனால் நான் பிகினி உடை அணிந்து நடிக்க மாட்டேன் எனக்கு அது செட் ஆகாது என கூறி படத்தில் இருந்து விலகி விட்டாராம் கீர்த்தி.
மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் புகழ் பிரபல நடிகை பிரியாமணி நடிக்க போகிறாராம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.