உடலுறவின் போது அந்த இடத்தில் முத்தம் கொடுப்பார்.. அது ரொம்ப பிடிக்கும்.. படுக்கையறை ரகசியத்தை கூறிய தீபிகா படுகோன்!!

108043

தீபிகா படுகோன்..

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை ரகசியங்களை கூறி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அதாவது, உடலுறவின் போது எடுத்த எடுப்பிலேயே உதடு மற்றும் கழுத்து பகுதிகளில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்து உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் அந்த விஷயத்தையெல்லாமா இப்படி வெட்டவெளிச்சமா சொல்லுறது? என ரசிகர்கள் முகம் சுளித்து விட்டார்கள்.