BJP ஆட்களின் நெற்றி பொட்டில் அடித்தார் போல் ஜோதிகா செய்த செயல்…! பரபரப்பில் தஞ்சாவூர்…!

374

நடிகை ஜோதிகா..

சில மாதங்களுக்கு முன் ஒரு விருது விழாவில் தஞ்சை பெரிய கோயில் எதற்கு , பேலஸ் போல பராமரிக்கிறார்கள். மக்கள் கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதனை, மருத்துவமனை கட்டவும், பள்ளிக்கூடம் கட்டவும் கொடுங்கள், என்று கூறியதாக சில சமூக விரோதிகள் தவறான செய்தியை பரப்பி உள்ளார்கள்.

ஆனால் உண்மை என்ன என்றால் கோயிலுக்கு செய்வது போல மருத்துவமனைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இருக்கும் சுத்தமற்ற பராமரிப்பை மாற்ற பணம் கொடுத்து உதவுங்கள்.

கோயிலுக்கு செய்வதை நிறுத்திவிட்டு பள்ளிக்கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் செய்யுங்கள் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனாலும் சில நெட்டிசன்கள் இதுதான் சாக்கு என்று ஜோதிகாவை தாக்கி வருகின்றனர்.

சாதாரண மக்களும் தற்போது ஜோதிகாவின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு, “நீங்கள் ஏன் தியேட்டரை கட்ட காசு கொடுக்க கூடாது ? நீங்கள் ஏன் மருத்துவமனை கட்ட காசு கொடுக்க கூடாது,?

நீங்கள் என் பள்ளிக்கூடம் காசு கட்ட காசு கொடுக்க கூடாது அவ்வளவு ஏன் ? பிறப்பால் நீங்கள் ஒரு முஸ்லிம் தானே, ஏன் நீங்கள் மசூதி கட்ட காசு கொடுக்க கூடாது?” என்று சம்பந்தம் இல்லாமல் பேசினார்கள்.

தற்போது தனது BJP ஆட்களின் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் தஞ்சையை சேர்ந்த மருத்துவமனை ஒன்றுக்கு 25 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார் ஜோதிகா.

இந்த நிலையில் மீராமிதுனுக்கு எந்த பதிலும் கூறாமல் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஜோதிகாவின் மனதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.