மீரா மிதுன் மட்டுமில்ல…. 120 பெண்களை சூறையாடிய சேரன்.. பகீர் கிளப்பிய பிரபலம்!!

477

சேரன்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.

அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.

அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சொல்ல மறந்த கதை , பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அற்புதமான படங்களை இயக்கி மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்து சேரனின் படைப்புகளும் படைப்பாற்றலும் மிகத் துல்லியமாக கருத்துரை எடுத்துரைக்கும்.

இதனிடையே இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் மூலம் அவப்பெயர் , வீண் வெறுப்பு, வீண் பழி உள்ளிட்டவற்றை பெற்று வெளியேறினார். அந்த சமயம் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சேரன் குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பாடகி சுசித்ரா, சேரன் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக். அவர் பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனின் இடுப்பை தவறான எண்ணத்தில் தான் தொட்டார். ஆனால் அது குற்றமாக கூறியதும் நான் தவறான எண்ணத்தில் தொடவே இல்லை என கூறி அழுது சீன் போட்டார்.

அவர் மீரா மிதுனை மட்டுமில்லை சுமார் 120 பெண்கள் தங்களிடம் சேரன் படப்பிடிப்புகளில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளனர். அவ்வளவு ஏன் சேரன் திருநங்கையை கூட விட்டுவைத்ததில்லை என சர்ச்சைக்குரிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா கூறியுள்ளார்.