நான் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரியா பவானி ஷங்கர்!!

274

பிரியா பவானி ஷங்கர்….

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எப்படிப்பட்ட பெண் என்பது குறித்து பேசினார். நான் ஸ்மார்ட்டான பெண், சென்சிட்டிவ்வான பெண். ஆனால், அறிவான பெண்ணா என்று கேட்டால் இல்லை. சில நேரங்களில் நான் எடுக்கும் முடிவுகள் தாமதமாக நினைத்து வருத்தப்பட்டதுண்டு.

நாம் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவை எடுத்துவிட்டேன் என வருத்தப்பட்டதுண்டு. அதனால் நான் அறிவான பெண் இல்லை. மாறாக பிரச்சனைகளை தீர்க்கும் பெண் என கூறினார்.