ஜெய்யுடன் காதலில் இருந்து பிரிந்த நடிகை அஞ்சலி.. விரைவில் தயாரிப்பாளருடன் திருமணமாம்!!

471

நடிகை அஞ்சலி.

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று. அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்திருந்தனர்.

அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.பின் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார்.

இந்நிலையில், பல கிசுகிசுவில் சிக்கினாலும் அஞ்சலி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். தற்போது ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி தெலுங்கு சினிமா பக்கம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அஞ்சலி தரப்பில் இருந்த அந்த தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ உறுதியான அறிவுப்பு வரவில்லை என்பதால் உண்மை என்ன என்பது பிறகு தான் தெரியவரும்.