அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டா… கண்ணை மட்டுமா பாக்குறாங்க.. கூச்சமில்லாமல் பேசிய ஷில்பா மஞ்சுநாத்!!

11630

ஷில்பா மஞ்சுநாத்..

கன்னட சினிமாவில் முங்காரு மேல் 2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த எமன் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இப்படத்தினை தொடர்ந்து காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், வெப், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ஷில்பா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார்.

அதில் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பது பற்றியும் பசங்க பார்க்கும் பார்வையை பற்றியும் பகிர்ந்துள்ளார். உங்களை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்திருக்கிறார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஷில்பா, யாரும் நேரடியாக கேட்க துணிவு கிடையாது. வேறொரு வழியாக சுற்றியபடி கேட்பார்கள். ஆனால் அது அந்த பெண்ணிற்கு தெரியும். வீட்டில் இருந்து யார் யார் என்ன நடந்து கொள்வார்கள் என்று கற்றுக்கொடுப்பார்கள்.

அந்த பேச்சு வரும் போது நான் கட் பண்ணிவிடுவேன். கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்கமாட்டேன். மேலும் பேசிய ஷில்பா, கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்வார்கள்.

அதில் ஒரு ரசிகர், “சரக்குல எங்கடா இருக்கு போதை அவ கண்ணை பாருங்கடா சொர்கமே தெரியுது” என்று மெசேஜ் செய்திருக்கிறார். அது கேட்டதும் வெட்கப்பட்ட ஷில்பா, அவர் எவ்வளவு சரக்கு சாப்புடுறாருன்னு தெரியுது, மது குடிக்காதீங்க உடம்புக்கு நல்லதில்ல, என் கண்ணை பாருங்க, அது ரொம்ப நல்லது என்று கூறியிருக்கிறார்.

“மூஞ்சிய யாரும் பார்க்கல என்ற கருத்துக்கு, இது ரொம்பவும் சாதாரணம், பார்க்காதீங்க, உங்களுக்கு என்ன புடிக்குமோ அதை பாருங்க” என்று கூச்சமின்றி ஓப்பனாக பேசியிருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.