படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ.. தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்!!

296

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமா சென்றதும் கீர்த்தி சுரேஷ் அங்கு தாறுமாறாக கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளார். தமிழில் மட்டும் சிறப்பாக நடித்துவிட்டு அங்கு சென்றதும் கிளாமரை அள்ளி தெளித்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் மீது தமிழ் ரசிகர்கள் வெறுப்பைக்காட்ட துவங்கிவிட்டனர்.

இங்கு தமிழில் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லை மீறாமல் பார்த்து பார்த்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு சினிமாவில் படுக்கை அறை காட்சிகளில் கூட தாராளம் காட்டி வந்தார்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நித்தின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷயை பட குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால், ஏற்கனவே நித்தின் ரெட்டியுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நித்தின் ரெட்டியுடன் காதலில் இருக்கிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பியது.

அதற்கு ஏற்றார் போல படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருந்தார். குறிப்பாக ரங்தே என்ற படத்தில் கீர்த்தி நடித்த போது படுக்கை காட்சிகளில் நித்தின் ரெட்டி புரட்டி எடுத்திருப்பார்.

இந்நிலையில், மீண்டும் நித்தின் ரெட்டியுடன் நடித்தால், திருமணம் செய்து வைத்தாலும் வைத்துவிடுவார்கள் என்று பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள விடுங்கடா சாமி என்று ஒரு கும்பிடு போட்டு அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.